search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை பறித்த மந்திரவாதியை பிடிக்க கேமராக்கள் ஆய்வு
    X

    பெண்ணிடம் நகை பறித்த மந்திரவாதியை பிடிக்க கேமராக்கள் ஆய்வு

    • குடுகுடுப்பைக்காரர்களிடம் விசாரணை
    • 6½ பவுன் நகை அபேஸ்

    ஆரணி:

    ஆரணி அடுத்த துந்தரீ கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர்க ளுக்கு 2 மகன்கள். ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் கட் டிட மேஸ்திரி ஆக உள்ளார். சந்திரனுக்கு மனநலம் பாதிப்புஏற்பட்டதாக கூறப்ப டுகிறது.

    இதனால் அவர் வீட் டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பகலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் குடுகுடுப்பைக்காரர் போல வந்திருந்தார். அந்த நபர், உன் கணவர் பெயர் சந்திரன். அவர் மனநலம் பாதித்துள்ளார்.

    உங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொரு வர் உங்களுடன் இருந்து வரு கிறார் என சொல்லவே அமுதாவும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

    அப்போது உனது கண வரை நல்லநிலையில் குணப்ப டுத்துவேன். அதற்கு சிறிது பணம் செலவாகும் உன்னி டம் எவ்வளவு நகை பணம் உள்ளது என கேட்டுள்ளார். அதனை கொடு நான் இரட் டிப்பாக தருகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.

    இதனால் தன் கணவன் நல மாக வேண்டும் நான் கொடுக்கும் பணம் இரட்டிப்பாகும் என்ற அற்புத ஆசையால் தன்னிடம் இருந்த 6½ சவரன் தங்க நகைகளையும் ரூ.3 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அந்த மர்ம ஆசாமி ஒரு மையை அமுதா நெத்தியில் வைத்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

    சுயநினைவு அடைந்த அமுதா எழுந்து பார்க்கும் போது தன்னிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதை உணர்ந் தார். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து அவரை தேடினார். ஆனால் அந்த நபர் தப்பிச்சென்று விட் டார்.

    இது குறித்து அவர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் அமுதாவிடம் குடுகுடுப்பைகாரர் போல்வேடமிட்டு வந்தவரின் அடையாளங்கள் குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள குடுகுடுப்பை காரார்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா க்களை தொடர்ந்து ஆய்வு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×