என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது பஸ் மோதி டிரைவர் சாவு
- தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்க் கொடுங்காலூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்தவர் கதி ரேசன் (வயது 52), கார் டிரை வர். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கதிரேசன் மோட்டார்சைக்கிளில் கீழ்க் கொடுங்காலூரில் இருந்து வந்தவாசி வழியாக ஆராசூ ருக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பு பகு தியில் வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கதிரேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்த வாசி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






