என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மாடு விழும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள்
- 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
- முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் நேற்று முன்தினம் காளைவிடும் திருவிழா நடைபெற்றது. காலை 7 மணிஅளவில் காளைவிடும் விழா தொடங்கியது.
கலசபாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் கலந்து கொண்டு காளைகளின் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் ஆர் வி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வேகமாக ஓடின.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளைக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அத்துடன் 40-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story






