search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்ப்பால் வார விழா
    X

    தாய்ப்பால் வார விழா

    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
    • ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் நேற்று மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    இதில் மேல்நகர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்தை குறித்தும் உணவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றனர்.

    தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று உணவுகள் காய்கறிகள் பழ வகைகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சத்து பாயாசங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×