search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் மோதல்; பெண் பலி
    X

    பைக்குகள் மோதல்; பெண் பலி

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் அகரம் சிப்பந்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவ ருக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

    இதற்காக அவரது தாய் மல்லிகா (45), மணமகன் சதீஷ் குமார் இருவரும் திருமண வேலையாக திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றனர்.

    அங்கிருந்து நாயுடுமங்கலம் நோக்கி பைக் கில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வடபுழுதிவூர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது, பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி என்பவர் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பைக்கில் வந்தார்.

    இந்த பைக்குகள் இரண்டும் நேருக்கு நேர் மோதியது. மேலும், அவ்வழியே துரைமுருகன் என்பவர் ஓட்டிவந்த பைக்கும் நிலை தடுமாறி இவர்கள் மீது மோதியது. இதில் 3 பைக்குகளும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது.

    இதில், சதிஷ்குமாரின் தாய் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இந்த விபத்தில் ராஜேஷ்குமார், துரைமுருகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விபத்தில் மல்லிகா இறந்ததால் சதீஷ்குமாரின் திருமணம் நின்றுபோனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×