என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசியில் பைக் திருடியவர் கைது
    X

    வந்தவாசியில் பைக் திருடியவர் கைது

    • கேமரா காட்சியில் சிக்கினார்
    • சிறையில் அடைப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி பாலு உடையார் தெருவை சேர்ந்த வர் வாசு மூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே பைக்கை நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்த போது மோட்டார்சைக் கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார்.

    போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆய்வு செய்ததில் திரு வள்ளுர் மாவட்டம் நெடுங் கல் கிராமம் சந்திரசேகர்புரத் தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 37) என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது.

    இதைய டுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×