என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுப்பாளையம் செந்தில்முருகன் கோயிலில் முருகர் சிலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
முருகன் சிலை அமைக்க பூமி பூஜை
- 45 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது
- வேலுடன் நிறுவ ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் செந்தில்முருகன் கோவில் உள்ளது.
இக்கோயில் எதிரே உள்ள சிறிய பாறை அருகில் கிராம பொதுமக்கள் சார்பில் புதியதாக 45 அடி உயர முருகர் சிலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
பீடத்தின் மீது முருகர் சிலை வேலுடன் இருப்பது போல் நிறுவ உள்ளதாக அப்பகுதி மக்களும், ஆன்மீகவாதிகளும் தெரிவித்தனர்.
Next Story






