என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்
    X

    பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

    • சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்த விபரீதம்
    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் விறகு எடுத்து கொண்டி ருந்த பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் தவ றாக நடக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் சிவன் (வயது 33). இவர் திருவண்ணாமலையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகி றார். நேற்று மதியம் இவர் நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் ஏரிக்கரை பகு திக்கு இயற்கை உபாதைக் காகஒதுங்கினார். அப்போது அந்த பகுதியில் பெண் ஒருவர் தனியாக விறகு எடுத்துக் கொண்டிருந்தார்.

    சுற்றிலும் ஆட்கள் யாரும் இல்லாததால் அதனை பயன்படுத்தி கொண்ட சிவன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு அவர் கையில் வைத் திருந்த சின்ன கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத் துவிட்டு தப்பி ஓடினார். சத் தம் கேட்டு வந்த அக்கம்பக் கத்தினர் காயம் அடைந்த பெண்ணை மீட்டு திருவண் ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிலர் தப்பியோடிய ஆட்டோடிரைவரை துரத்தி சென்றனர். இதற்கிடையில் ஆட்டோவில் பெட்ரோல் தீர்ந்து விடவே சிவன் ஆடடோவை சிறிதுதூரம் தள்ளிக் கொண்டே சென்றார்.

    பின்னர் ஆட்டோவில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற் றிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றார். சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் அவரை விரட்டி சென்றவர் கள் தேனி மலைப்பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அப் போது சிவன் மதுபோதையில். இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சிவனை திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்ப டைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர்.

    கழுத்து அறுபட்ட பெண்ணுக்கு ஆஸ்ாத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×