என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றும் போது ஓதுவார்களை வைத்து பாடல் பாட வேண்டும்
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றும் போது ஓதுவார்களை வைத்து பாடல் பாட வேண்டும்

    • பக்தர்கள் வலியுறுத்தல்
    • சினிமா பாடகர்களை வைத்து பாடுவதை மாற்ற வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 2022 கார்த்திகை தீபத்திரு விழாவில் மகாதீபம் அன்று மாலை மகாதீபம் ஏற்றும் வேளையில் சினிமா பாடகர்களை வைத்து பாடல் பாடும் முறை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    அதனை அறிமுகபடுத்தியது கோவில் நிர்வாகத்தினர். அதற்கு முன்பு ஓதுவார்கள் திருமுறை மற்றும் சிவாயநம பாராயணம் நடக்கும். இவர்கள் வந்த பிறகு அண்ணாமலையார் பாடல் தவிர ஐயப்பன் பாடலும் மாரியம்மன் பாடலும் தான் அதிகம் அண்ணாமலையார் கோயிலில் ஒலிக்கிறது. அப்படியே ஒலித்தாலும் வாயில் வந்த வார்ததைகளை எல்லாம் வைத்து பாடுவதை கேட்க சிரமமாக உள்ளது.

    வருடம் முழுவதும் பாடும் ஓதுவார்கள் திருமுறை பாடுகிறார்கள். ஏன் மகாதீபத்தின் போது மட்டும் விலக்கிவைக்க படுகிறார்கள். அண்ணாமலையாரை நால்வர் பெருமக்கள் திருமுறைகளால் பாடி உள்ளனர்.

    அந்த பாடல்கள் எதுவும் தெரியாத சினிமா பாடகர்களை வைத்து நடத்துவதை தவிர்த்து பழைய முறைப்படி சங்கத்தமிழ் பாடல்களை பாடும் ஓதுவார்களை வைத்து நடத்த வேண்டும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×