என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் மீது தாக்குதல்
- தந்தை, மகன்கள் மீது புகார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே ஒண் ணுபுரம் வடக்கு விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவ ருக்கும் சகோதரர் கண்ணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10-ந்தேதி பொன்னுசாமி தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த கண்ணன், அவரது மகன்கள் செல்வராஜ் (35), செல்வ மூர்த்தி (30), ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி கையாலும், கம்பாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பொன்னுசாமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொன்னுசாமியின் மகன் காமராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
Next Story






