என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரரை கள்ளக்காதலனை ஏவி அடித்து கொன்ற மனைவி
    X

    ராணுவ வீரரை கள்ளக்காதலனை ஏவி அடித்து கொன்ற மனைவி

    • காட்பாடி பெண் உள்பட 4 பேர் கைது
    • தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யதர்ஷினி, ரேஷ்மா ஆகிய மகள்களும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கவிதா காட்பாடியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு மாரிமுத்துவை வீடு புகுந்து கும்பல் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    வீட்டில் ரத்தகாயங்களுடன் கிடந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாரி முத்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக் டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கவிதா அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங் கலை சேர்ந்த சங்கர் மற்றும் சிறுமூர் பாபு என்ற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகியோருடன் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    அவர்கள் வீட்டில் இருந்த மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து கவிதா, சிறுமூர் பாபு, அடையபுலம் பிரகாஷ் ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள சங்கரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×