என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- ஏரளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும், போளூர் எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






