என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது
    X

    பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ராம கிருஷ்ணன் (வயது 55). என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராமகிருஷ்ணன் நேற்று இரவு 2.10 மணியளவில் ஆசனமாபேட்டை கிராமம் கலவை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது டாஸ்மாக் கடை எதிரில் பீட் நோட்டில் கையெழுத்திட்டு சாலை ஓரமாக மண் ரோட்டில் நின்றிருந்தார். காஞ்சிபுரத்திலிருந்து கலவை நோக்கிச் சென்ற தனியார் கம்பெனி பஸ் நின்று கொண்டிருந்த ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் ராமகிருஷ்ணனின் இடது முழங்கால் துண்டாகி தொங்கியது. உடனிருந்த ஓம் காட் போலீஸ் சந்தோஷ் 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்பூலன்ஸ் ராமகிருஷ்ணனை செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர்கள் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து, மியாட் மருத்துவமனையில் சப் இன்ஸ்பெக்டர்சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×