search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது
    X

    போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது

    • ரூ.8250 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் மற்றும் போலீசார் கேளூர் சந்தை மேடு பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்குள்ள கடையில் இருந்து குட்கா போன்ற போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.8250 ஆகும். இது சம்பந்தமாக வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×