search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு தலைமையில் புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்
    X

    அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    செய்யாறு தலைமையில் புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்

    • அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செய்யாறு வட்ட கிளையின் பேரவை கூட்டம் வட்டக்கிளை தலைவர் எல்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

    பேரவைக் கூட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் வரவேற்றார்.

    இறுதியாக மாவட்ட செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    கூட்டத்தில் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரியும், சார் நிலை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே கட்டிக் கொடுக்கும் வகையில் இடம் ஒதுக்கீடு செய்யக் கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவையில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×