search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாற்றில் புதைந்து கிடந்த ஆண் பிணம்
    X

    செய்யாற்றில் புதைந்து கிடந்த ஆண் பிணம்

    • முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
    • போலீஸ் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திரு வண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் இடுகாடு மற்றும் சுடுகாடு இரண்டும் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் வெள்ளம் செல்கிறது.

    இதனை தொடர்ந்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளத்தைக் காண சென்றனர். அப்போது ஆற்று வெள்ளம் நடுவே தண்ணீரில் ஆண் உடல் முழுவதும் புதைந்த நிலையில் கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது.

    இதனால் ஆற்று வெள்ளத்தைப் பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூழ்கிய நிலையில் கிடந்த உடலை பார்த்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்க ப்பட்டது. அதன் உதவியுடன் ஆற்றில் புதைந்திருந்த உடலை தோண்டி கரைக்கு எடுத்து வந்தனர்.

    இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவரை மர்ம கும்பல் அடித்து கொலை செய்து உடலை ஆற்றில் புதைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மழை பெய்து வெள்ளம் ஓடியதால் மண் அரிப்பில் உடலின் கால்கள் வெளியே தெரிந்தது. அவரை கொலை செய்தவர் யார்? இறந்த கிடந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×