search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளியை அரிவாளால் வெட்டிய கும்பல்
    X

    மாற்றுத்திறனாளியை அரிவாளால் வெட்டிய கும்பல்

    • முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வெம்பாக்கம்:

    வந்தவாசி நல்லூர் சேர்ந்தவர் வரதன் (வயது 42) மாற்றுத்திறனாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் தங்கி உள்ளார்.

    இன்று காலை இயற்கை உபாதை கழித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வரதனை சரமாரியாக வெட்டினர்.

    ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை வருவதை பார்த்த மர்ம கும்பல் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வரதனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முன்விரோதம் காரணமாக வரதனை கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×