என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது வேன் மோதி சினிமா பட ஊழியர் பலி
- வீடு கட்ட பூமி பூஜை செய்துவிட்டு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
தேசூர் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஷ்வா (வயது 22). இவர் சென்னை சினிமா பட தயாரிப்பு குழுவில் பணிபுரிந்து வந்தார். தண்டையார்பேட்டை பகுதியில் விஷ்வா தங்கி வேலை செய்து வந்தார்.
சினிமா பட ஊழியர்
இவரது நண்பர் அபினேஷ் (23) இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வந்தவாசி அருகே தேசூரில் புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்துவிட்டு பின்னர் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
விபத்தில் சாவு
அப்போது வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆராசூர் கூட்ரோடு அருகே திருவள்ளூரில் திருமண நிகழ்ச் சிக்கு சென்று விட்டு செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






