search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவஞ்சலி
    X

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவஞ்சலி

    • ராணுவ வீரர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய ராணுவவீரர்களின் திருஉருவ படங்கள் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர்.

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சிறுநாத்தூர் கிராமத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் தமிழரசன் அகல்தீபம் ஏற்றி வைத்தார்.

    கீழ்பென்னாத்தூர் உயிரிழந்த ராணுவவீரர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

    பா.ஜ.க. நகர தலைவர் விஜயகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் திருமலை, விஜியகுமார், வணிகர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், மாயாண்டி, ரவிச்சந்திரன், ஆட்டோ ஒட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆறுமுகம், சரவணன், அரசு, ராகுல், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்து, மவுன அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

    Next Story
    ×