என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் படுகாயம்
    X

    மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜூலு. இவர் தனது குடும்பத்துடன் காரில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரத்துக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.

    கார் வந்தவாசி-திண்டிவனம் சாலையில், வந்தவாசி போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதைத் தொடர்ந்து சாலையோர 10 அடி ஆழ பள்ளத்தில் கார் புரண்டு கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 8 பேரில் 2 பெண்கள் மட்டும் காயமடைந்தனர்.

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×