என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
- 20 மது பாட்டில்களை பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் எஸ்.வி.நகரம் மற்றும் பையூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்த எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55), பையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 2 பேர் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
Next Story






