என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேகம் நடந்த காட்சி.
வந்தவாசி ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் 108 சங்காபிஷேகம்
- யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஜப்திகாரனை கிராமத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் 108 சங்காபிஷேகம் விழா நடைபெற்றது
வந்தவாசி அடுத்த ஜப்திகாரனை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல அபிஷேகம் முடிவடைந்த நிலையில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு 108 சங்குகள் மூலம் ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மங்கள மேல வாத்தியங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க சங்க அபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






