என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணியில் விஷம் வைத்ததில் 10 நாய்கள் சாவு
- கோழி இறைச்சியில் விஷம் வைத்து கொன்றனர்
- சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரி அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி விளை நிலங்கள் உள்ளன.
இந்த விவசாய விளை நிலங்கள் சுற்றி நாய்கள் சுற்றி திரிவது வழக்கம் ஆனால் தற்போது இரவு நேரங்களில் இந்த விவசாய நிலத்தின் அருகில் சமூக விரோதிகள் கூடாரமாக விளங்கி வருகின்றன.
மேலும் மதுகுடித்து விட்டு பாட்டிகள் உடைத்து குடிமகன்கள் விவசாய நிலத்தை சேதபடுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
இதனால் குடிமகன்களுக்கு நாய்களால் தொந்தரவு ஏற்படுவதால் நாய்களுக்கு கோழி இறைச்சியில் தடை செய்யப்பட்ட விஷத்தை கலந்து நாய்களுக்கு உணவாக அளித்துள்ளனர்.
இதனால் விஷ கோழி இறைச்சியை திண்ற 10 நாய்கள் இறந்துவிட்டன. இச்சம்பவம்குறித்து சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் விவசாய நிலத்தை சேதபடுத்தியும் நாய்களை விஷம் வைத்து கொன்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






