என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவரின் வங்கி கணக்கில் ரூ.1¼ லட்சம் திருட்டு
    X

    முதியவரின் வங்கி கணக்கில் ரூ.1¼ லட்சம் திருட்டு

    • ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன மோசடி
    • வாலிபர் கைது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த நல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர், வந்தவாசியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வாலிபரிடம், ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.10 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

    இதையடுத்து ரூ.10 ஆயி ரத்தை எடுத்து ஏழுமலையி டம் கொடுத்த அந்த வாலிபர், ஏற்கனவே தன்னிடம் இருந்த போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

    பின்னர் அந்த வாலிபர் ஏழுமலையின் ஏ.டி.எம். கார்டு மூலம் பல்வேறு இடங்களில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் எடுத்துள்ளார். இதுகுறித்து ஏழுமலைக்கு தாமதமாக தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ. டி.எம்.மில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் சன்னதி தெரு வழியாக வந்தவாசி தெற்கு போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு தனியார் வங்கி ஏ.டி.எம். முன்பு. நின்றிருந்த வாலிபரை சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட தோகைமலை நெசவாளர் தெருவை சேர்ந்த காட்ஜான் (வயது 21 )என்பதும் ஏழுமலையின் ஏடிஎம் கார்டு மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காட்ஜானை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.86 ஆயிரத்து 500 மற்றும் 5 ஏ டி எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கைதான காட்ஜான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×