search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் ஏழூர் பல்லக்கு விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் ஏழூர் பல்லக்கு விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

    • ஏமூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 6-ந்தேதியும், பூ போடுதல் நிகழ்ச்சி 7-ந்தேதியும் நடைபெற உள்ளது.
    • பல்லக்கு அந்தந்த ஊர்களில் வலம் வரும்போது வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏழூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 6-ந் தேதியும், பூ போடுதல் நிகழ்ச்சி 7-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்லக்கு தொடங்கி ஏழூர் சுற்றி வரும் வரை கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தவிர வேறு யாரும் தலையிட கூடாது. பல்லக்கு அந்தந்த ஊர்களில் வலம் வரும்போது வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சிக்கு அனைத்து ஊர்களிலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சப்தஸ்தான பல்லக்கு ஊர்வலத்தின் போது தப்பாட்டம் நடத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முடிவு செய்யப்பட்டன.

    Next Story
    ×