search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • து போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாரதி (வயது 34).ஜீவாநகர் உமாபாரத் லே அவுட் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இவருடைய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாரதி அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.அந்த அறை முழுவதும் மெகா சைஸ் குப்பை தொட்டி போல குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×