என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
- உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
- மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை முன்னிட்டு, ஒன்றியத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், இளைஞர் அணி அமைப்பாளருமான பாலசுப்பிரமணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






