என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை சின்னவீரம்பட்டி வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகவிழா நடைபெற்றக் காட்சி.

    உடுமலை சின்னவீரம்பட்டி வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • காலை 9 மணிக்கு சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    உடுமலை:

    சப்த கன்னிகளில் ஒருவராக உள்ள வாராஹி அம்மனுக்கு கோவில் அமைத்து வழிபடுவதென உடுமலை சின்னவீரம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம், விழாவின் முதல் நிகழ்வாக மங்கல இசை,கணபதி,லட்சுமி,நவகிரக ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது.

    2 வது நாளாக மாலை 4.30 மணியளவில் பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி,கோபுரகலசம் வைத்தல், மூலவருக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட முதல் கால பூஜையும் நடைபெற்றது. காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×