search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து - 2 லோடு ஆட்டோக்கள் எரிந்து நாசம்
    X

    யணைப்பு வீரர்கள் யை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லோடு ஆட்டோ எரிந்து நாசம் ஆனதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து - 2 லோடு ஆட்டோக்கள் எரிந்து நாசம்

    • அதிகாலை 2 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
    • மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கேயம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை எதிரே பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும் குடோனை மூடிவிட்டு மாணிக்கம் வீட்டிற்கு சென்றார்.இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் குடோன் உரிமையாளர் மாணிக்கத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இருந்த போதிலும் குடோனில் இருந்த வேஸ்ட் பனியன்கள் மற்றும் 2 லோடு ஆட்டோக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் என அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×