என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சமபந்தி விருந்து
    X

    சமபந்தி விருந்து நடைபெற்றக் காட்சி.

    சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சமபந்தி விருந்து

    • வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

    மங்கலம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விழாயகா பழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் வருவாய்த்துறை ஆய்வாளர் பிரேமா, பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், திமுக., சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி , துணைச்செயலாளர் தியாகராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, வினோஜ்குமார், துளசிமணி ஆறுமுகம், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×