என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகையையொட்டி திருப்பூரில் சூடுபிடிக்கும் அகல்விளக்குகள் விற்பனை
    X

    கோப்புபடம்

    கார்த்திகையையொட்டி திருப்பூரில் சூடுபிடிக்கும் அகல்விளக்குகள் விற்பனை

    • கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது
    • அகல் விளக்குகள் விற்பனை திருப்பூர் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது.

    திருப்பூர் :

    கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். வீடுகள், கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும் அகல் விளக்கு உள்ளிட்ட விளக்குகளில் தீபம் ஏற்றி அனைவரும் வழிபாடு செய்வர்.

    அவ்வகையில் வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகளில் தீபம் வைத்து வழிபடுவர். இதற்காக, அகல் விளக்குகள் விற்பனை திருப்பூர் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது. பொள்ளாச்சி, பொங்கலூர் ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மண்ணால் ஆன அகல் விளக்குகள் பல்வேறு அளவுகளில் தற்போது திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது.திருப்பூரில் உள்ள நிரந்தர மண் பாண்டம் மற்றும் விளக்கு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை துவங்கியுள்ளது.

    இது மட்டுமின்றி திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் விற்பனை செய்யும் நடைபாதையோர கடைகள், தள்ளு வண்டி கடைகளிலும் இவற்றின் விற்பனை காணப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்காக இவற்றை கடைகளில் தேர்வு செய்து பலரும் வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×