search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.75 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.75 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை

    • 152 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 585 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.75லட்சத்து 38ஆயிரத்து 405 க்கு வணிகம் நடைபெற்றது

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 152 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 585 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.71 க்கும், குறைந்தபட்சம் ரூ.59.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்த ரூ.75லட்சத்து 38ஆயிரத்து 405 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    Next Story
    ×