search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னக்குமாரபாளையம் பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
    X

    சின்னகுமாரபாளையம் பள்ளியின் சுற்றுசுவர்.

    சின்னக்குமாரபாளையம் பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

    • பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
    • நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன குமாரபாளையம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அப்போது அடித்தளம் வலுவற்றதாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நுழைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விரிசல் விட்டு சேதமடைந்து உள்ளது.

    இதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடக்கப்பள்ளி என்பதால் சுட்டித்தனம் நிறைந்த குழந்தைகளே இங்கு அதிக அளவில் வருகை தருவார்கள். நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளதை குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

    அந்த சுவர் கேட்டை இயக்கும் போது அசைந்து கொடுத்து மரத்துடன் சாய்ந்து நின்று கொள்கிறது. எப்போது கீழே விழும் என்று தெரியவில்லை. எனவே சின்ன குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×