என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து பரிவாா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    இந்து பரிவாா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

    • பாரதமாதா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவா் சாய்குமரன் தலைமை வகித்தாா்.
    • ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    அவிநாசிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வலியுறுத்தி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    பல்லடத்தை அடுத்த கொடுவாய் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாரதமாதா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவா் சாய்குமரன் தலைமை வகித்தாா். இதில் அவிநாசிபாளையம் லட்சுமி நகா், அம்மன் நகா், போக்குவரத்து நகா் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தின் புதிய கட்டடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தொடங்க வேண்டும், சுங்கம் பகுதியில் உயா்மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

    ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×