search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

    • சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.
    • பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில்உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 30-க்கும்மேற்ப ட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களைதேர்வு செய்ய உள்ளனர். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள்வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவுசெய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைபட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சிபெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் வேலைநாடுபவ ர்களும் வேலையளி ப்போரும்https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்துபுது ப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ண ப்பம் பெற்றுஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால்த ங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152-9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×