search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 துணை பொதுத்தேர்வு நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    பிளஸ்-2 துணை பொதுத்தேர்வு நாளை நடக்கிறது

    • 19-ந் தேதி முதல் 26ந் தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது
    • தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளாதவர்களுக்கும் வருகிற 19-ந்தேதி முதல் 26ந்தேதி வரை துணைத்தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.

    மே 10ந்தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 380 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×