search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை அமைக்க கோரி மேயரிடம் மனு
    X

    மேயரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

    பாதாள சாக்கடை அமைக்க கோரி மேயரிடம் மனு

    • கே.எம். நகர் பகுதியான 8 வீதிகளுக்கும் தார்சாலை அமைப்பதாக திருப்பூர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு வேலை தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு, கே.எம். நகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மேயரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 52- வது வார்டுக்குட்பட்ட வெள்ளியங்காடு தெற்கு கே.எம். நகர் பகுதியான 8 வீதிகளுக்கும் தார்சாலை அமைப்பதாக திருப்பூர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டியில் பாதாளசாக்கடையும் சேர்த்து தார்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் எங்கள் பகுதியில் மட்டும் பாதாள சாக்கடை அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு வேலை தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் பாதாளசாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×