என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம் அரசு  பெண்கள் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்
    X

    கோப்புபடம்

    மங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்

    • ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக கழிப்பறை தேவைப்படுகிறது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஷோபனா தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கு உடனடித் தேவையாக பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக கழிப்பறை தேவைப்படுகிறது. எனவே புதியதாக கழிப்பறை கட்டித்தர வேண்டும்,

    பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட அரசிடம் நிதி ஒதுக்கீடு கோருவது , புதிய உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இறுதியாக பெற்றோர் - ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எடப்பாடி பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் பொருளாளர் யாசுதீன் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய தலைவராக முகமது அப்பாஸ், மற்றும் பொருளாளராக நாசர் அலி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Next Story
    ×