search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 21-ந் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு
    X

    கோப்புபடம்

    வருகிற 21-ந் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு

    • கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினர்களாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கு வருபவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்கிறார். முடிவில் பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறுகிறார். விழாவில் சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார் ராமசாமி, இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×