search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் வழியாக இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

    • கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.
    • சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    இந்திய ெரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ெரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் தான். இருப்பினும் அதன் பெரும்பகுதி கர்நாடகாவில் தான் செல்கிறது. எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனை கடந்த ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.இந்தியாவில் இயக்கப்படும் பல வந்தே பாரத் ெரயில்கள் காலியாகவும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் நிலையில், சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் இந்த 199 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது.

    இந்த ெரயிலை முதல் நாள் பிரதமர் மோடி நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முதலே இந்த ெரயில் டிக்கெட்கள் வெயிடிங் லிஸ்டிலேயே இருந்துள்ளது. அதிலும் கோவை - சென்னை மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயில்களின் டிக்கெட்டுகள் பல நாட்கள் முன்பாகவே விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் கோவை - சென்னை வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புவோர் முன்கூட்டியே நிச்சயம் புக் செய்தாக வேண்டும்.

    சென்னை -கோவை வந்தே பாரத்தில் 56 இருக்கைகளை கொண்ட முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் இருக்கைக்கான டிக்கெட் ரூ. 2,310ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 450 சீட்களை கொண்ட வழக்கமான சேர் காருக்கு டிக்கெட் ரூ.1,215ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத்தில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கும். ஆனால், இது சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் முன்பதிவை குறைக்கவில்லை.

    எப்போதும் இருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்கள் இதற்கு சாட்சியாகும். ஒரு சில வந்தே பாரத் ெரயில்களில் டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதாக புகார் இருக்கும் நிலையில் சென்னை -கோவை வந்தே பாரத் நல்ல வரவேற்புடன் புதிய சாதனை படைத்து வருகிறது.

    முதலில் சென்னை- கோவை வந்தே பாரத் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதிவேகமாக ெரயில்கள் செல்லும் வகையில் டிராக் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் வந்தே பாரத் பயண நேரம் மேலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு. சேலம் வழியாக 11.50க்கு சென்னை சென்றடையும். அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத் இரவு 8.15 மணிக்கு மீண்டும் கோவை வந்தடையும். இந்த ெரயில் திருப்பூர் மற்றும் சேலத்தில் இரண்டு நிமிடங்களும் ஈரோட்டில் 3 நிமிடங்களும் நிறுத்தப்படுகிறது.

    சென்னை - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதித்ததும், அதைத் தொடர்ந்து அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் வேகத்தை அதிகரித்ததும் பயண நேரத்தை குறைக்க உதவி இருக்கிறது. சென்னை- கோவை இடையே பகல் நேரத்தில் ஏற்கனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் நிலையில், அதையும் தாண்டி வந்தே பாரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

    மேலும் நாட்டில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ெரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை -கோவை ரூட்டில் 8 பெட்டிகள் மட்டும் இருக்கிறது. இந்த ரூட்டில் டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் ஒரு ரூட்டில் 6 மாதங்கள் ெரயில் இயங்கிய பிறகே தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் தற்போதைய சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    Next Story
    ×