search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டை தடுக்க ரெயில்வே தளவாட  பொருட்கள் அகற்றம்
    X

    கோப்புபடம். 

    திருட்டை தடுக்க ரெயில்வே தளவாட பொருட்கள் அகற்றம்

    • ரெயில்வேக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும் கேட்பாரற்று கிடக்கும் சிலாப் தண்டவாளம் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி துவங்கியது.
    • ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்படுமென பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். 

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையம் பகுதி முதல் இரண்டாவது ரெயில்வே கேட் நிறுத்தம், என்.ஆர்.கே., புரம் வரை, கிழக்கு பகுதியில் ெரயில் தண்டவாளத்தின் இருபுறமும் மற்றும் மேற்கு பகுதியில் அணைப்பாளையம் வரை குடியிருப்புகள் உள்ளன. தண்டவாளத்தில் இருந்து 30 மீ., தொலைவில் வீடுகள் உள்ள நிலையில் அவ்வப்போது ெரயில்வே தளவாட பொருட்கள் திருடப்பட்டு வந்ததாக புகார்கள் வந்தது.

    திருட்டை தடுக்கவும் ெரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும் கேட்பாரற்று கிடக்கும் சிலாப் தண்டவாளம் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி துவங்கியது.ராட்சத கிரேன் உதவியுடன் பயன்பாடற்ற நிலையில் ஓரமாக கிடந்த தண்டவாளம், சிலாப் கற்கள், நவீன ெரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டது. இவை ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்படுமென பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×