search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்கல்வி சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க   சிறப்பு உதவி மையம்
    X

    கோப்புபடம். 

    உயர்கல்வி சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க சிறப்பு உதவி மையம்

    • முதற்கட்டமாக, கலெக்டர் அலுவலத்தில் இதற்காக உதவி மையம் செயல்பட ெதாடங்கி உள்ளது.
    • மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறையினரால் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லூரியில் சேராத 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது.கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததாலும், குடும்ப நிதி நிலை காரணமாகவும், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரிகளில் சேரவில்லை.மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறையினரால் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்தி உயர்கல்வி தொடராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கலெக்டர் அலுவலத்தில் இதற்காக உதவி மையம் செயல்பட ெதாடங்கி உள்ளது.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி தொடராதோர் பட்டியல் திரட்டப்பட்டதில் 47 பேர் இருந்தனர்.இவர்களில் 5 பேர் தவிர அனைவரும் தொழிற்கல்வி, மருத்துவம், பொறியியல் கல்லூரி, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டனர். இவர்களில் 2பேர் தவிர மையத்தை அணுகி கல்லூரியில் சேர்ந்துவிட்டனர் என்றனர்.

    Next Story
    ×