search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளான் உற்பத்தி மையம் அமைக்க  பெண் விவசாயிகளுக்கு  ரூ.1 லட்சம்   மானியம்
    X

    காளான். 

    காளான் உற்பத்தி மையம் அமைக்க பெண் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்

    • பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
    • சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    உடுமலை:

    தற்போது உணவு வகையில், காளான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    மேலும் சந்தையில் இறைச்சிக்கு மாற்றாக காளான்கள் கருதப்படுவதால் தமிழக அளவில், காளான் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் உறுதி செய்கிறது. அதன் அடிப்படையில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா கூறியதாவது:-

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை சார்பில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.காளான் உற்பத்தி மையம் அமைக்கும் போது தினசரி வருமானம் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    காளான் உற்பத்தி அலகு நிறுவுவதற்கு போதுமான சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்படும் ஊராட்சியில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×