என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை அரங்க பாடவேளையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய பாடத்திட்டம் வெளியீடு
    X

    கோப்புபடம். 

    கலை அரங்க பாடவேளையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய பாடத்திட்டம் வெளியீடு

    • வாரத்திற்கு இரு பாடவேளைகள் வீதம், கலை அரங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நிரந்தர, பகுதிநேர ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, பயற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தனித்திறன் வளர்க்கும் வகையில், வாரத்திற்கு இரு பாடவேளைகள் வீதம், கலை அரங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நடனம், நாடகம், இசை என ஐந்து பிரிவுகளின் கீழ், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, நிரந்தர, பகுதிநேர ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, பயற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கலை அரங்க பாடவேளையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய பாடத்திட்டம், வீடியோவுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

    இதை மாணவர்களுக்கு சொல்லி தருவதோடு, பயிற்சிக்கு பின் மாணவர்கள் வெளிப்படுத்தும் தனித்திறன்களை, புகைப்படம், வீடியோ வடிவில் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், கலை அரங்க பாடவேளையில் என்னென்ன தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்ற சிலபஸ் வெளியிடப்பட்டது.இதுசார்ந்து ஆசிரியர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் பயிற்சி நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×