என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பி.ஏ.பி., பிரதான கால்வாய் மதகுகளை சீரமைக்க வேண்டும் - பாசன சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- காங்கயம்- வெள்ளகோவில் பகுதி பி.ஏ.பி. கிளை கால்வாய் பாசன சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
- பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு நீர்வளத் துறை பரம்பிக்குளம்-ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் காங்கயம்- வெள்ளகோவில் பகுதி பி.ஏ.பி. கிளை கால்வாய் பாசன சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் ஒரு சுற்று வீதம் 4.5 அடி தண்ணீர் மட்டுமே வழங்கி வரும் நீரை இரண்டு சுற்றுகள் வீதம் 4.7 அடி விகிதம் வழங்க வேண்டும். ஐந்து நாட்கள் பாசனத்தை ஏழு நாட்களாக வழங்கவும், பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுத்து மதகு கதவுகளை சரி செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






