search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் பகுதியில்  கல்குவாரி அமைப்பது  குறித்து கருத்து கேட்பு
    X

    கலெக்டர் வினீத் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    காங்கயம் பகுதியில் கல்குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு

    • கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    • வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காங்கயம் தாலுகா பரஞ்சேர் வழி ஊராட்சி நால்ரோடு கிராமத்தில் அமைய உள்ள 2 கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

    கல்குவாரியால் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும். எங்கள் பகுதியில் பாதிப்பு இல்லை என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, 'கல்குவாரியை முறைப்படி நடத்த வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். கனிமத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். நால்ரோடு கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு வீடுகள் உள்ளன. தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரியில் வேலை செய்பவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

    Next Story
    ×