search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா- மேயர் தேசிய கொடியேற்றினார்
    X

    மேயர் தினேஷ்குமார் கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி.

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா- மேயர் தேசிய கொடியேற்றினார்

    • திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
    • விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கு உதவி மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் தினேஷ்குமார் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு திருப்பூர் குமரன் நினைவுத்தூண் நோக்கி ஊர்வலமாக சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர் ,துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×