search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் நிட்டிங் மிஷின் மேலே விழுந்து வட மாநில தொழிலாளி சாவு
    X

    கோப்புபடம். 

    திருப்பூரில் நிட்டிங் மிஷின் மேலே விழுந்து வட மாநில தொழிலாளி சாவு

    • நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 23). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே தங்கி இருந்து அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நூலை துணியாக மாற்றும் நிட்டிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    நள்ளிரவு மிஷின் ஓடி கொண்டிருக்கும்போதே தரையில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது திடீரென நிட்டிங் மிஷின்ராம்குமார் மேலே விழுந்து நசுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    சத்தம் கேட்டு உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்குமாரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக இருந்தார்.இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×