search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் ஒன்றியம் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம்   திறன் பயிற்சி முகாம்
    X

    கோப்புபடம். 

    குண்டடம் ஒன்றியம் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி முகாம்

    • முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் மயிலன், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    குண்டடம்:

    குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கம்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் சமுதாய திறன் பள்ளி திட்டத்தின் கீழ் ஆடை வடிவமைப்பு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணி, துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதேபோல் பெரிய குமாரபாளையம் ஊராட்சியில் காயர் கால்மிதி தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.ராஜ், துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் ஜோதியம்பட்டி ஊராட்சி–யில் உடனடியாக உணவு தயாரிக்கும் மசாலா பொடிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் மயிலன், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு மேலும் தொழில் முனைவோருக்கான வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை குண்டடம் வட்டார அணித் தலைவர் கனகராஜ், பயிற்றுனர்கள் வனிதா, தனலட்சுமி, சிவக்குமார், நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×