search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து மும்பைக்கு மேலும் ஒரு விமான சேவை டிசம்பர் மாதம் முதல் இயக்கம்
    X

    கோப்புபடம்.

    கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து மும்பைக்கு மேலும் ஒரு விமான சேவை டிசம்பர் மாதம் முதல் இயக்கம்

    திருப்பூர்:

    திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த விமானம் வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த விமானம் 11:20 மணிக்கு மும்பையை சென்றடையும்.

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால் அங்கிருந்து வேறு விமானம் மாறி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.

    கோவையில் இருந்து ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால், சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி என்ற முறையில் பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை டி 2வில் இமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் விமானம் மாறிச் செல்லலாம்.

    இதனால் கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு இந்த ஏர் இந்தியா விமான சேவை இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இது 6-வது விமான சேவையாகும்.

    கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையை தொடங்குகிறது. அதையடுத்து ஏர் இந்தியா-காலை 9 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன.

    Next Story
    ×